சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?
தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.

அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.
சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.
ஆவி பிடித்தல்:
தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தண்ணீர்:
கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
சுத்தமான மூக்கு:
தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
உப்புத் தண்ணீர்:

சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.
இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.
யூகலிப்டஸ் எண்ணெய்:
கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.
மூலிகைத் தேநீர்:
சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.
மஞ்சள் தூள்:
சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

காரமான உணவுகள்:
காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.
பூண்டின் மருத்துவ குணங்கள்
வெள்ளை பூண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

1. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
2. உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
2. மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.
4. உடல் பருமனை குறைக்க உறுதுணை புரிகிறது(HDL = LDL ).
5. வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது.
6. அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது.

7. வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
8. குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது, மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
9. ஒற்றைத்தலைவலியை போக்குகிறது.
10. மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது, கருப்பையை வலுப்படுத்தும்.
11. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது.
12. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.